சனி, 19 நவம்பர், 2011

சட்டக்கலை அறிமுகம்—02

சட்டக்கலை அறிமுகம்—02

معنى كلمة الفقه وتطوره

மௌலவி எம். எம்.ஸகி BA (Hons) மதீனா:

 பிக்ஹ் என்ற வார்த்தை தருகின்ற அதே கருத்திற் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள்.

1. தீன் :

இவ்வார்த்தை பல கருத்துக்களிற் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடத்தில் எமது தலைப்போடு தொடர்பான கருத்துக்களே எமக்கு அவசியமாகின்றது. அறபு மொழியில் இவ்வார்த்தை கீழ்வரும் கருத்துக்களில் கையாளப்பட்டுள்ளது.

கூலி கொடுத்தல்:

இதற்குக் கீழ்க்காணும் அல்-குர்ஆன் வசனம் சான்றாகும்.

مَالِكِ يَوْمِ الدِّينِ
'கூலி கொடுக்கப்படும் நாளின் அதிபதி'(அல்-பாதிஹா: 4) மேலும் அவன் றுகின்றான்..

 أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَدِينُونَ
'நாம் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பின். மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டுக் கூலி வழங்கப்படுவோமா? (அஸ்-ஸாப்பாத்: 53)

வழி :

அல்லாஹ் கூறுகிறான்...

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
'உங்களுக்கு உங்களுடைய வழி; எனக்கு என்னுடைய வழி' (அல்-காபிரூன்: 6)

சட்டக்கலை அறிமுகம்—01

சட்டக்கலை அறிமுகம்—01

معنى كلمة الفقه وتطوره
http://www.islampaathai.com/

மௌலவி எம். எம்.ஸகி BA (Hons) மதீனா:

அறபு மொழியில் பிக்ஹ் எனும் வார்த்தை ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளுதல் என்று பொருள்படும். அது மறைவானதொரு விடயமாகவோ, வெளிப்படையானதொரு விடயமாகவோ இருக்கலாம். எனினும், சில அறிஞர்கள் நுணக்கமானதொரு விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு மாத்திரமே 'பிக்ஹ்' எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பர். இவ்விரண்டாவது கருத்திலேயே அல்-குர்ஆன் இப்பதத்தைக் கையாண்டுள்ளது.

'பிக்ஹ்' என்ற வார்த்தை பொதுவாக இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டக் கலையைக் குறிக்கின்றது. ஆரம்பத்தில் இஸ்லாமிய வரலாற்றில் இக்கலையானது, ஷரீஅத்தின் ஏனைய கலைகளைப் போலவே தனியானதொரு கலையாக இருக்கவில்லை. இஸ்லாமிய உலகத்தில் கல்வி வளர்ச்சிக்கேற்ப இத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. பிக்ஹ் எனும் வார்த்தைக்குச் சொல்லப்பட்ட வரைவிலக்கணத்தின் மூலம் இக்கலை ஆரம்ப காலத்திலேயே மூன்று வளர்ச்சிக் கட்டங்களைக் கண்டுள்ளதை கவனிக்க முடிகிறது. பரிபாசையில் பிக்ஹ் என்ற சொல்லுக்கு இம்மூன்று கட்டங்களிலும் மூன்று விதமாகவே வரைவிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. அவை வருமாறு:

திங்கள், 17 அக்டோபர், 2011

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

நான் 01.10.2010 அன்று இளையாங்குடியிக்கு சென்றுருந்தபோது பேஷ் இமாம் அவர்கள், 'சார், நீங்கள் பல கட்டுரைகள் எழுகிறீர்கள், ஆனால் சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் வழி தவறிப் போகிறதினை தடுக்க கட்டுரைகள் எழுதுங்கள் என்றார்'. அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரம் இட்டபோது உண்மையில் நடந்த நிகழ்ச்சியினை உதாரணமாக வைத்து இந்தக் கட்டுரையினை வடித்துள்ளேன்!

சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது.

ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது, அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை.வெள்ளம் தலைக்கு மேல் போன பின்புதான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.

2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன.

சனி, 15 அக்டோபர், 2011

குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா ?


குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா ?

هل يستطيع الإنسان أن يغير أخلاقه؟
மௌலவி எம். வை. மஸிய்யா B. A.(Hons)
மனிதன் தனது குணங்களை மற்றிக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்ற மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு விடையளிப்பதில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தென்படுகின்றன. அவை வருமாறு:

1.மனிதனால் தனது குணங்களை மாற்றிக் கொள்ள மடியாது ஏனெனில், அவை மனிதனிடம் நிரந்தரமானவை; அவை மனித இயல்புகளாகவே கருதப்படுகின்றன; அவற்றை மனிதன் தானாக மாற்றிக் கொள்ளவோ, அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ முடியாது என்பர் சில அறிஞர்கள்.

2.மனிதன் தனது குணங்களை மாற்றிக் கொள்ளலாம். அது அவனால் முடியாத, அசாத்த்தியமான விடயமன்று என்பர் அதிகமான அறிஞர்கள் இவ்விரு கருத்துக்களிலும், இரண்டாவது கருத்தே சரியானதாகும்.

பொதுவாக குணங்கள் இரு வகைப்படுகின்றன. அவை
அ.   மனிதனுடைய இயல்பிலேயே குடிகொண்டுள்ள குணங்கள்.
ஆ.மனிதன் தனது முயற்சி, பழக்க வழக்கங்கள், போன்றவற்றின் அடிப்படையில் தேடி அடைந்து கொள்ளும் குணங்கள்.